ஜல்லிக்கட்டுக்காக 6 நாளாக அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார். போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். தமிழக கலாச்சாரத்தை சீரழிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
