தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகிகளால் மொடக்குறிச்சி அடுத்த சோலாரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பதட்டம், விவசாயிகளின் தொடர் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலையின்மை, எந்த ஒரு திட்டமும் சரியாக நிறைவேற்றாததால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி உள்ளிட்ட குழப்பங்களை மறைக்கவே மாட்டு இறைச்சிக்கு தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது தனி மனித உரிமையை பறிக்கும் இந்த சட்டம் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தனியார் பால் நிறுவன பாலில் கலப்படம் செய்வதை தமிழக அரசு பால் வளத்துறை அதிகாரிகள், சுகாதாரதுறையினர் இணைந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான முறையில் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
