டெல்லியில் படித்துக்கொண்டிருந்த மாணவன் சந்தேகத்துரிய நிலையில் இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு மத்திய, தமிழக அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்

டெல்லியில் படித்துக்கொண்டிருந்த மாணவன் சந்தேகத்துரிய நிலையில் இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு மத்திய, தமிழக அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
.

குடும்பத்துக்கு தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படித்து வந்தார். இவர் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டு, மரணம் அடைந்த சம்பவம் சந்தேகத்திற்கு உரியது என அவரது பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முத்துக்கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே அந்த மருத்துவமனை மாணவரின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு டெல்லி காவல்துறை தகுந்த விசாரணை நடத்தி உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய, மாநில அரசுகள் உயிரிழந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அவரது குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *