கதிராமங்கலம் பொதுமக்கள் மீது முதல்வரே குற்றம் சுமத்துவது நியாயமல்ல: ஜி.கே.வாசன்

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி தெரிவிப்போம்.

எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. ஓட்டு போடுவதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. தவறு செய்யாதவர்களுக்குத்தான் வாக்கு என்றால் யாருக்கும் ஓட்டு போட முடியாது.

விவசாயிகளின் உடமைகளை ஜப்தி செய்யக்கூடாது என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் வறட்சி இல்லை என்ற அரசு வக்கீலின் வாதம் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *