24.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ பரபிர்ம்மத்தின் 169 – வது வார்ஷிக ஆராதனை துவக்க விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா அறங்காவல் குழு தலைவர் திரு. G.K. வாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் திரு. G.R. மூப்பனார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை டாக்டர். நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் டாக்டர். N. சுப்பையன் IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
