தமாகா தலைவர் வாசன் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:நீட் தேர்வில் மத்திய அரசு தமிழக மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முதல் மொழியாக தமிழ், இரண்டாவது மொழியாக ஆங்கிலம், விருப்பப்பட்டவர்கள் இந்தி படிக்கலாம். ஆனால் இந்தியை திணிக்கக்கூடாது. நீட் மற்றும் இந்தித்திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி வரும் 29ம்தேதி தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் தெருமுனை பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு வாசன் கூறினார்.
