சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது.
வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கடந்த 40 ஆண்டுகால திராவிட ஆட்சியாளர்கள் ஏரிகளையும், குளங்களையும் சரியாக தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
இந்த நிலைக்கு அவர்களே பொறுப்பு.
அவர்கள் தங்கள் கடமையை செய்யாததால் மழைநீரை சேமிக்க முடியாமல் போய் விட்டது.
சுமார் 23 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் கலந்து உள்ளது.
இவ்வாறு தண்ணீர் வீணடிக்கப்பட்டது ஒரு அரசுக்கு நல்லதல்ல.
திராவிட ஆட்சியாளர்களுக்கு இந்த மழை பாடம் கற்பித்துள்ளது.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
