தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனபோக்கை கடைபிடிக்கிறதோ என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இது பற்றி தமிழக அரசு கண்டிப்போடு மத்திய அரசிடம் பேசவேண்டும்.
