தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்துள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஜன.5-ம் தேதி மதுரையில் த.மா.கா.சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கும்பகோணத்தில் பேட்டி அளித்தார்.
