தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- சந்திரயான்-2 நிலவுப்பயணத்திற்கு நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப்பணிகளும், முயற்சிகளும் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உந்துதலையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி பயணம் வெற்றிகரமாக தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.
