தமிழக சட்டமன்றத்தின் மாண்புகள் மீறப்பட்டு ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் தனபால்தான் காரணம். எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு, வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.
இதை ஏற்று, பெரும்பான்மை இருக்கிறது என்று ஏற்றுக் கொண்ட கவர்னரும் இதற்கு பொறுப்பாவார். சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்துள்ளார்.தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சி தற்காலிகமானதே. இவ்வாறு அவர் கூறினார்
